பள்ளி பாடத்தின் முக்கியத்துவம்

பள்ளி பாடத்தின்  முக்கியத்துவம்

சமூக அறிவியல்


இந்தியப் பள்ளிகளில் சமூக அறிவியல் கற்பித்தலின் பரிணாம வளர்ச்சி:
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் சமூக அறிவியல்களைக் கற்பிப்பது, மற்ற புதிய விடுதலை பெற்ற தேசங்களைப் போல், புதிய நவீன இந்தியாவை நினைத்து உருவாக்கும் தேவைகளால் அதிக முக்கியத்துவம் பெற்றது.
  இந்தியாவில் ஆரம்பகால சமூக அறிவியலின் தோற்றமும், அவசியமும் பற்றி அறிய வேண்டுமானால், ‘பொதுவான குடிமக்கள் கல்வியில் சமூக அறிவியல் கற்பிக்கும் பங்கு’ என்ற யுனெஸ்கோ, 1954:60 அறிக்கையின் கொள்கைதான் மூலகாரணமாக இருக்கும்.
 இதன் மூலம், இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது.
    குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்கள். இந்தப் பாதையில் பல கருத்துக்கள் பிறகு எழுந்தன. சுதந்திரம் அடைந்த பிறகு உருவான முதல் இந்தியாவின் தேசிய கல்விக் குழுவின் அறிக்கை (இந்திய அரசாங்கம், 1966) நாட்டு முன்னேற்றத்தை ஆணித்தரமாக வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த சில ஆண்டுக்களுக்குள்ளேயே, நேருவின் கொள்கைகள்- கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய குழு (National Council of Educational Research and Training - NCERT) மற்றும் மாநிலக் குழுக்களின் மூலமாக முக்கியமாக செயல்பட ஆரம்பித்தன.
      NCERT - யின் ஆரம்ப காலத்தில் ‘இந்தியாவில் சமூக அறிவியல்களின் நிலை’ என்ற ஒரு ஆய்வு நடத்தினார்கள். இந்தியாவின் பள்ளிகளில் தற்போது கற்பிக்கும் சமூக அறிவியல் பாடங்களில் காணப்படும் பலவிதமான நிறை – குறைகள் ஆகியவைகளின் உண்மை நிலையினை அந்த ஆய்வு தெளிவு படித்தியது.
     ஜூன் 1963 முதல் ஜூன் 1964 வரை பள்ளி ஆசிரியர்கள், சமூக அறிவியல் பாடத்தில் நிபுணர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் உதவியுடன் அகில இந்திய அளவில் நான்கு பயிற்சிப்பட்டறைகள் நடத்த, அந்த ஆய்வு வழிவகுத்தது. 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை, பாட நூல் வழிகாட்டிகள் (Syllabus) உருவாக்கப்பட்டன.
       அந்த வழிகாட்டிகளின் அடிப்படையில், சமூக அறிவியல் பாட புத்தகங்கள் – ‘மாநிலம்’, ‘தேசம்’, ‘உலகம்’ ஆகியவைகளை உள்ளடக்கி – 3-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை உருவாக்கப்பட்டன. 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை, வரலாறு, குடிமையியல், புவியியல் ஆகியவைகளை உள்ளடக்கிய தனியான பாடபுத்தகங்கள் உருவாக்கப்பட்டன. (கோயல் & சர்மா, -  Goel and Sharma - 1987: 176).  
பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல்களிலின் தொடக்கத்திலேயே குடிமையியல் கல்வியின் பண்புகளை பாடங்களாகச் சேர்க்க வேண்டும் என்பதுதான் 1975 ஆம் ஆண்டு முதல் தேசிய பாடத்திட்டத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கொள்கையாகும். இருப்பினும், அந்த அறிக்கையினைக் கவனமாகப் படித்தால், பாடத்திட்டக் குறிக்கோளில் சில நுணுக்கமான புதியதும், சில சீர்திருத்தக் கருத்துக்களும் தென்படும்
           . முதல் பாடத்திட்ட சட்டம் – 1975 – வருங்கால இளைய குடிமகன்கள், சமூகம், மாநிலம், நாடு மற்றும் பரந்த உலகக் காரியங்களில் ஈடுபட முயலவேண்டும் என்று ஆசைப்பட்ட போதிலும், ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வியின் தேசிய பாடத்திட்டம் (NCERT, 1988: 5) சமூக அறிவியல்களைக் கற்பிப்பதின் முக்கியமான கருத்தினை வலியுறுத்தியது.
      நமது அரசியல் சாதனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகளைக் கடைப்பிடிப்பதுடன், மக்கள் அவர்கள் கடமைகளையும், உரிமைகளையும் ஒரு குடிமகன் என்ற நிலையில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அதில் வலியுறுத்தப்பட்ட முக்கியமான கருத்தாகும்.  பத்து வருடங்கள் கழிந்த பிறகு, பள்ளிக் கல்வியின் தேசிய பாடத்திட்டம் (NCERT– 2000) ஒரு புதிய அரசியல் சூழ்நிலையில் குடிமக்கள் கல்வியை மாற்றி அமைத்தது.
      அதன் மூலம், இந்தியன் என்ற பெருமை கொண்டு,  அடிப்படைக் கடமைகளை அறிந்து கொள்ளும் விதமான கொள்கைகளை வளப்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் விதமான பாடங்களில் நேரிடையாக அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. 
இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது. குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்கள்.

பிற்காலத்தில் கொண்ட கருத்து 1975 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அமைந்தது. NCERT- 1975: 19 அறிக்கையில் மிகவும் தெளிவகச் சொல்லப்பட்டவைகள் இது தான்: “குறுகிய மனப்பான்மை, கொள்கைப் பிடிவாதம், முன்னேற்றத்தைத் தடுக்கும் குணம் ஆகியவைகளை வளரவிடாமல் தடுத்து, சுதந்திரம், பொது உடைமை, மனிதாபிமானம் ஆகிய கொள்கைளையும், அவைகளின் உயர்ந்த தன்மைகளையும் உயர்த்தும் விதமான பாடங்களை சமூக அறிவியலில் சேர்ப்பதின் மூலம் முக்கிய பண்புகளை அடையத் தேவையான அறிவினைப் பெற்று, சரியான மனநிலையினை வளர்த்துக் கொள்ளும் படியான ஒரு நேர்மையான உலக அமைப்பு ஏற்படும்படிச் செய்யவேண்டும்.
   அந்த நிலை ஏற்பட்டால், பொருளாதாரம் மற்றும் சமூக நலன்கள் மேம்பட்டும், வன்முறைகள் குறைந்தும், சுற்றுப்புற அமைதி அதிகமாகியும் காணப்படும். (NCERT, 1975: 19)
NCFSC, 2000 என்ற அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்கள், 1988 ஆம் ஆண்டு கல்வித் திட்ட அறிக்கைக்கு நேர் எதிர்மாறாக இருந்தது. NCERT, 1988: 3 என்ற அறிக்கையில் கூறப்பட்ட வாசகங்கள் இதோ: ‘குடிமக்களை சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் சமூகத் தொழில் திறமைகளையும், குடிமை இயல்களையும் மேம்படுத்தி சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் முயற்சியில் பங்குகொள்ள அவர்களை ஈடுபடுத்த முயலுவதாகும்.
சமீபகாலத்திய NCF (National Curriculum Framework) பரிசீலனை அறிக்கையில் அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகக் கூறப்பட்ட கொள்கைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்ட அதே சமயத்தில், சமூக அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாக தீவிரமான கொள்கையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அணித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
முதலில், சமூக அறிவியலின் நோக்கத்தின் முக்கிய தன்மையும், ஒரு நேர்மையானதும், அமைதியானதுமான சமூகத்தை உருவாக்குவதற்கு அவசியமான அறிவையும் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். கல்வியின் மூலம் தான் இதை அடைய முடியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது.
    ‘கல்வியில் பொதுவான குறிக்கோளில் சமூக அறிவியல் பாடங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்’ என்று 1988 ஆம் ஆண்டு கல்வி திட்ட அமைப்பு இந்தக் கருத்தைத் தான் குறிக்கிறது.
     இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது சமூக விசாரணையை ஒரு அறிவியல் செயலாக உருவாக்க முயல்கிறது.
     அதில் அதிகார ஆணவப்போக்குகளை எதிர்த்து, மாணவர்களிடையே ஒரு பகுத்தறிவுக்கு ஏற்புடைய நன்னெறி, மனத்திண்மை ஆகியவைகளை உயிர்த்தெழச்செய்து, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்ட உரிமைகளைச் சில சமூக விரோதிகள் பறிக்க முற்படும் போது விழிப்புடன் இருக்கும் படிச் செய்ய வேண்டும் என்றும், அந்த மாணவர்களிடையே உணர்ச்சியுள்ள கேள்வி கேட்கும் திறனுள்ள எழுச்சியுள்ள மாற்றங்களை உருவாக்கும் குடிமக்களை உருவாக்குவதும் அவசியமாகும் என்றும் வலுயுறுத்தப்படுகின்றன.

தமிழ்மொழி

ஒதாமல் ஒரு நாளும் இருக்க வெண்டாம் 1
ஒதுவது ஒழியேல் கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே 2 ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து 3
       போன்ற வரிகள் கல்வியின் மேன்மையை நமக்கு உணர்த்துகின்றன.
மக்களை பிற உயிர்களிடமிருன்து வெறுபடுத்துவது மொழி. மொழி இயல்பனது. தன் உள்ளத்து உணர்வுகளை எளிமையாக வெளிபடுத்த உதவுவது. நமது பண்பட்டினை ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. தமிழ்மொழியைப் பயில்வதால் மொழிப்பற்றும் நட்டுப்பற்றும் மேம்படும்.
        பிற பாடங்களை படிப்பதற்கும் அடிப்படையானது தாய் மொழி. எனவே தாய் மொழி கற்றலும் கற்பித்தலும் அவசியமாகிறது.

தாய்மொழி முதல் மொழி மக்களை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்துவது மொழி. குழந்தை தன் தாயிடமே முதல் கற்றலைத் தொடங்குகிறது. தாய் தன் குழந்தைக்கு முதன் முதலில் தன் தாய் மொழியையே பயிற்றுகிறாள். பின் தன் உறவினர்கள் தன் வீட்டைச்சுற்றியுள்ள சமூகத்திடமிருந்தும் ஓரளவிற்கு மொழியைப் பேசக் கற்றுக்கொள்கிறது.
     இவ்வாறு ஓரளவிற்கு மொழியைப் பேசக் கற்றுக்கொண்ட பின்பே பள்ளிக்கு வருகிறது. ஆசிரியர் குழந்தையின் மழலைச்சொற்கள் கொச்சைச் சொற்கள், வட்டார வழக்குகள் நீக்கி பேசவும், கேட்கவும், படிக்கவும், எழுதவும் கற்பிக்கிறார். இவ்வாறு பள்ளியிலேயே மொழிக்கற்றல் முழுமைபெறுகிறது.
மூவகை மொழிக்கற்றல் 1. மொழிக்கற்றல் 2. மொழியைப்பற்றிக் கற்றல் 3. மொழிவழிக்கற்றல்
மொழிக்கற்றல் என்பது மொழியின் அடிப்படைத்திறன்களைக் கற்றல் ஆகும் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற திறன்களை தொடக்க நிலையில் மாணவர்கள் பெறுதலே மொழிக்கற்றலாகும். 
       மொழியைப்பற்றி கற்றல் மொழியைக்கற்றுக்கொண்டபின் மொழியில் உள்ள இலக்கியங்கள் இலக்கணங்கள, மொழியியல், மொழியின் அமைப்பு, பயன்பாடு போன்றவற்றை கற்றல் மொழியைப்பற்றிக் கற்றல் ஆகும்.
மொழிவழிக்கற்றல் மொழியின் வழியாக பிற பாடங்களைக் கற்றல் மொழிவழிக்கற்றல் ஆகும்.
           மொழியில் உள்ள அடிப்படை திறன்களைக்கற்ற பின் அம்மொழியின் வழியாக அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு போன்ற பிறப்பாடங்களை கற்க இயலும். தொடக்கநிலையில் மொழி கற்றல் சிறப்பாக நடைப்பெற்றாலதான் பின் மொழிவழிக்கற்றலும் மொழியைப்பற்றிய கற்றலும் சிறப்பாக நடைபெறும். மொழிப்பாடம் ஒரு திறன் பாடம் "கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மொழிப்பாடம் வளர்த்தலால் மொழிப்பாடம் ஒரு திறன் பாடம்".4
தொடக்கநிலையில் குழந்தைகளிடம் மொழித்திறனை வளர்த்தலே முதலிடம் பெறுகிறது. இதற்கு பாடப்பொருள் தேவையாயினும் அது சிறப்பிடம் பெறுவதில்லை ஆனால் பிறப் பாடங்களில் பாடப்பொருள் அதாவது பாடக்கருத்து சிறப்பிடம் பெறுகிறது. அறிவியல் பாடத்தில் அறிவியல் சார்ந்த பாடப்பொருளும் வரலாறு பாடத்தில் மன்னர்களின் வரலாறு, போர் நிகழ்வுகள் போன்ற செய்திகளும் சிறப்பிடம் பெறுகிறது. புத்தகம் மாறினாலும் ஆண்டு தோறும் அதே பாடங்களே பாட நூலில் இடம் பெறும். ஆனால் மொழிப்பாடத்தில் புத்தகம் மாறும்போது ஒரேப்பாடப்பொருள் இடம்பெறுவதில்லை.
            மொழிப்பாடத்தில் பாடப் பொருளைவிட மாெழித்திறன்களே சிறப்பிடம் பெறுகிறது. அடிப்படைத் திறன்களை வளர்க்க பாடப்பொருள் தேவை. அப்பாடப்பொருளைக் கொண்டே மொழித்திறன்கள் வளர்க்கப்படுகின்றன எனவே மொழிப்பாடம் ஒரு திறன் பாடம். இது பாடப்பொருள் பாடம் அல்ல.


கணிதம்


கணித பாடம் கற்பித்தலின் அவசியம்
 


“என்னும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்ற ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை அடிப்டையாகக் கொண்ட கணிதப்பாடமும் எழுத்தை அடிப்டையாகக் கொண்ட மொழிப்பாடமும் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றுள் கணித பாடம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
      கணிதம் எண்கணிதம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுகின்றது. ஆரம்பக் கல்வி பெறும் பிள்ளைகள் 1 இலிருந்து 100 வரை சரியாக எண்ணுவதற்குக் கற்றுக் கொண்டால் தான் கூட்டல் - கழித்தல் - பெருக்கல் - பிரித்தல் போன்ற கணக்குகளைப் படிப்படியாக செய்து கொள்ளமுடியும்.
‘மொண்டிசூரி’ப் பாடசாலையில் சேர்ந்து ஆரம்பக் கல்வியைத் தொடரும் பிள்ளைகள் பொருட்களை இனங்கண்டு எண்ணுவதற்கு முற்படுகின்றனர்.
         முதலில் கைவிரல்களை எண்ணுவதற்கு பிள்ளை தயாராகின்றது. ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் என்றும் இரண்டு கைகளிலும் 10 வில்கள் என்றும் எண்ணிப் பார்கின்றனர்.
அதேபோன்று ஒவ்வொரு காலிலும் 5 விரல்கள் என்றும் எண்ணிப்பார்க்கின்றனர். கண்கள் 2 என்றும், காதுகள் 2 என்றும், மூக்கு 1 என்றும் எண்ணி அறிந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பொருட்களையும் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்ப்பது பழங்களில் ஒரு சில பழங்கள் அவிந்து விட்டால் நல்ல பழங்கள் எத்தனை என்றம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டியுள்ளனர்.
           எனவே ஆரம்பக் கல்வியில் எண்ணிப் பார்க்கும் முறையை சிறுவர்கள் கண்டறிகின்றனர்.
உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்கள் கணித பாடத்தில் திறமையாக இருக்க வேண்டியுள்ளனர். விசேடமாக விஞ்ஞானத்துறையில் உயர்தரக் கல்வியைப் பெற விரும்புவோர் கணிதத்தை நான்கு விளங்கிச் செய்யக் கூடியவர்களாக இருக்கவேண்டும்.
         வானவியல் இரசாயனம், உயிரியல், பெளதீகவியல் போன்ற பாடங்களை ஆழமாக கற்போர் கணிதத்தில் திறமை பெற்றிருப்பதால் தான். வெற்றிகரமாக அப்பாடயலாம்.
அது மாத்திரமன்றி ஓர் ஆய்வாளர் தனது ஆய்வுகளை நடத்தும் போது கணிதத்தோடு தொடர்புடைய பிரச்சினைகளை விடுவிக்க கணித அறிவு மிகவும் தேவைப்படுகின்றது. அறிவு நுணுக்கம் பெறுவதற்கு கணித அறிவு இன்றியமையாதது.
மேலும் ஒருவர் கல்விகற்று வெற்றிகரமாக செயல் புரிவதற்கு கடமைகளை நிறைவேற்றுவதற்கு கணக்குப் பாடம் மிகவும் துணை புரிகின்றது எனலாம்.                   உதாரணமாக ஒருவர் ஒரு கம்பனியில் கணக்காளராக அல்லது ஒரு கடையில் கணக்குப் பிள்ளையாக தொழில் செய்வதெனில் கணக்குப் பார்க்கும் நுண்ணறிவு அவருக்கு மிக மிக அவசியமாகின்றத.
கணக்குப் பரிசோதகராய் தொழில் பார்ப்போருக்கும் கணித அறிவு மிகவும் வேண்டற்பாலது. எனவே பாடசாலைகளில் கணிதப் பாடத்தை எதிர்காலப் பயன் கருதி மிகவும் சிரத்தையுடன் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டியுள்ளனர். உண்மையில் பார்க்கமிடத்து கணிதத்தில் திறமையுடையோர் திட்பமான அறிவு பெறுகின்றனர்.
(திணீணீuraணீy) இவ்வாறான அறிவு உடையவன் தனது வாழ்க்கையைக் கணக்குப் போட்டுத்தான் நடத்துவான். எந்தப் பிரச்சினையாயினும், அதனைத் தீர்ப்பதற்கு கணக்குப் போட்டுப் பார்ப்பான்.
எனவே, கணிதம் கற்பதனால் புத்தி கூர்மை, நிதானப்பண்பு ஆகியன விசேடமாக வளர்ச்சி அடைகின்றன. எனவேதான் கணிதப் பாடம் சகல பாடசாலைகளிலும் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது.
உண்மையில் கணக்குப் பாடம் ஒரு தொடர்ச்சியான செயற்கிரமம் அதனால் தொடரில் ஏதாவது குறைவு ஏற்பட்டால் கணக்கில் செய்ய முடியாமல் ஆகிவிடுகின்றன.
பிழைகள் ஏற்படுவதனால் மனத் தளர்ச்சி ஏற்படுகின்றத. அதனால், கணக்குப் பாடத்தில் ஆர்வம் குன்றிவிடலாம்
   . அவ்வாறு ஏற்படாது. சரிவர கணக்குப் பாடத்தைக் கற்று விளங்கிக் கொள்ள வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
கணக்குப் பாடம் பல பிரிவுகளை உடையாத இருப்பினும், கணக்கு என்பது ஒன்று தான். ஒரே விடயத்தில் பல அம்சங்கள் அமைகின்றன அவ்வளவு தான்.
கணக்கு அறிவை ஒருவர் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை விடுவிக்க முயற்சி செய்தால் வேறுபாடுகுள் நீங்கிவிடும்.
      உதாரணமாக வீட கட்டும்போது கணிதத்தின் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன.
வீட்டுப்புற உருவ அமைப்பு(ஜிlan) வரையும் போது கோணம், நீள் சதுரம், சதுரம், வட்டம், அரைவட்டம் போன்ற (மிலீoசீலீtry) அறிவு தேவைப்படுகின்றது.
செலவு மதிப்பீடு(ரிstணீrலீtலீ) செய்யும் போது கூட்டல், பெருக்கல், பிரித்தல் அறிவு அவசியப்படுகின்றது.
           எனவே பாடசாலைகளில் மாணவர்கள் கணிதப் பாடத்தைக் கற்கும் போது வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சாதனமாக அது அமையவேண்டும்.
கணித விதிகளைக் கற்பிக்கும் போது இலகுவான கணக்குகளையே பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்கை முறை மூலமாக விதிகளை மனதில் பதித்துக் கொள்வார்கள்.
பிள்ளைகளுக்கு கணக்குகளைத் தயாரிக்கும்போது பிள்ளைகளின் சூழலையும், பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டே கணக்குகள் அமைய வேண்டும்.
குறிப்பாக பாலர் வகுப்பில் கணிதம் கற்பிக்கும்போது அனுபவங்கள் சுயமுயற்சிகள் மூலமாகவே அப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
      கணிதத்தில் முதலில் எழுத்து வேலையைச் செய்விக்கக் கூடாது. ஆரம்பத்தில் வாய்மொழி மூலமாகவே கணக்குகளை மாணவரிடையே வழங்கி மனக் கணித முறையை பயிற்றுவிக்க வேண்டும். அதன் விளைவாக எதனையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சி ஏற்படுகின்றது.
பாலர் கீழ்ப்பிரிவில் 1ம், 2ம் தவணைகள் வரை, பிள்ளைகளுக்கு கணிதப் பாடத்தில் எழுத்துப் பயிற்சிகள் கொடுப்பது பொதுத்தமில்லை. ஆரம்பத்தில் கூடியளவு மனன வேலையே அளிக்க வேண்டும்.
     கடைவைத்து விளையாடுதலை வகுப்பில் அறிமுகம் செய்யலாம்.
1 ஆம் வகுப்பில், ஒரு கலன் வைத்து, அதில் ஒர போத்தல் கொண்டு தண்ணீர் ஊற்றச் செய்யலாம். 6 போத்தல்கள் நிரப்பினால் கலன் நிறைந்து வழியும் என்பதை உணர்த்த வேண்டும்.
அத்துடன் கனவடிவங்கள் பற்றிப் படிப்பிக்கலாம். கோணம், சதுரம், உருண்டை இவைகளைக் கொண்டு விளையாடச் செய்யலாம். அதனால் பிள்ளைகள் கனவடிவங்கள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.
2 - 4 ஆம் வகுப்புக்கள் வரை கணிதத்தில் எழுத்து வேலையும், இலக்கங்களின் உபயோகங்களும் படிப்படியாகக் கூட்டப்படவேண்டும்.
4 விதிகளிலும் நல்ல திட்பம் ஏற்பட வேண்டும். 5 ஆம் வகுப்பில் 16 ஆம் வாய்ப்பாடு வரையில் ‘@!திய மனப்பாடம் ஏற்பட வேண்டும். 4 ஆம் வகுப்பு வரை 4 விதிகளில் போதிய திறமை ஏற்படாவிடில் பிற்கால வாழ்வில் இதை ஈடு செய்வது கஷ்டமாக இருக்கலாம்.
பொதுவாக நோக்குமிடத்து மனக் கணிதத்துக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும். மனதால் முடியாத வேளையிலேயே எழுத்து மூலம் எழுதி கணக்குப் பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும் மாணவர்கள் கணக்குப் பார்க்க எப்பொழுதும் பேனாவையும் கடதாசியையும் நம்பியிருக்கக் கூடாது. அத்துடன் கணிதத்தில் சுருக்க முறைகளை மாணவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
    அதன் விளைவாக விரைவும் திட்பமும்(ஷிpலீலீனீ anனீ aணீணீuraணீy) மாணவர்களுக்குக் கிடைக்கும்.
எனவே கணித பாடம் பாடசாலைக் கல்வியில் சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும் என்பது உணரப்பட்டு அதற்கான வசதிகள் வழங்கப்பட்டு விரிவாக்கப்படுதல் அவசியமாகும்.
 








Comments

Popular posts from this blog

பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.

சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு

வளரிளம் பருவம்