Posts

Showing posts from January, 2018

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்  ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய “பறை” ஒலியே இந்த உலகின் முதன் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி என கற்காலம் தொடங்கி கணினி காலமான இன்று வரை சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அசாத்திய முன்னேற்றம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாது வாழ்வின் அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தாக்கமும் வரமா ? சாபமா ? என்ற கேள்வி அனுதினமும் பேசுபொருளாகிவிட்டது. சமூக ஊடகங்களின் சாதக பாதகங்களை இக்கட்டுரையில் அலசுவோம். சமூக ஊடகம் என்பவை என்ன ? மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருக்கவும், உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், நமது அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்கள். இன்று மக்களிடையே மிகப் பிரபலமான சமூக ஊடகங்களாக காணப்படுவது கூகுள், பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், யூடியுப் போன்றவையும் இன்னும் பல சமூக வலைத்தளங்கள் ஆக...

பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி.  அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள்.  திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள். வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்...

மும்மொழிக் கொள்கை

மும்மொழிக் கொள்கையில் மாற்றம்    தமிழ்நாட்டில் 1968-ல் திமுக அரசு மும்மொழிக் கொள்கையை இரு மொழிக் கொள்கையாகச் சட்டமன்றத் தீர்மானத்தின் மூலம் மாற்றியது. தமிழ் அடையாளத்தின்மீது கட்டுமானம்                     செய்யப்பட்ட மாநில ஒருமைப்பாட்டுக்கு, இந்தி (அல்லது இன்னொரு இந்திய மொழி) தேவை இல்லை என்ற நோக்கத்தைக் கொண்டு இந்தக் கொள்கை அமைந்தது. தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்க்கை வாய்ப்புகளுக்கு ஆங்கிலமே போதும் என்ற நோக்கத்தையும் இருமொழிக் கொள்கை உள்ளடக்கியது.                   மத்திய அரசு தான் நடத்திய கேந்திரிய வித்தியாலயங் களில் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றியது. தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் கற்பதுபோல், மத்தியக் கல்வி வாரியத்தின்கீழ் உள்ள கேந்திரிய வித்தியாசாலைகளில் மாணவர்கள் இந்தியும் ஆங்கிலமும் கற்றனர்.  இந்திய அரசில் பணிபுரியவும், இந்தியப் பொருளாதாரத்தில் பங்குகொள்ளவும் இந்த இரண்டு மொழிகளே போதும் என்ற நோக்கத்தில் இந்த இருமொழிக் கொள்கை அம...