Posts

Showing posts from December, 2017

பள்ளி பாடத்தின் முக்கியத்துவம்

பள்ளி பாடத்தின்  முக்கியத்துவம் சமூக அறிவியல் இந்தியப்   பள்ளிகளில்   சமூக   அறிவியல்   கற்பித்தலின்   பரிணாம   வளர்ச்சி : பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் சமூக அறிவியல்களைக் கற்பிப்பது, மற்ற புதிய விடுதலை பெற்ற தேசங்களைப் போல், புதிய நவீன இந்தியாவை நினைத்து உருவாக்கும் தேவைகளால் அதிக முக்கியத்துவம் பெற்றது.   இந்தியாவில் ஆரம்பகால சமூக அறிவியலின் தோற்றமும், அவசியமும் பற்றி அறிய வேண்டுமானால், ‘பொதுவான குடிமக்கள் கல்வியில் சமூக அறிவியல் கற்பிக்கும் பங்கு’ என்ற யுனெஸ்கோ, 1954:60 அறிக்கையின் கொள்கைதான் மூலகாரணமாக இருக்கும்.  இதன் மூலம், இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சமூக அறிவியல் கல்வியின் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்துவது வெகுவாக எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக, சமூக அறிவியல் கல்வியின் மதிப்பு புதிய நாட்டிற்கு அவசியம் என்ற பேச்சு எழுந்தது.     குடிமக்களின் கல்வி என்பதில் ஒரு புதிய கருத்து உண்டான காரணத்தால், ஒரு படித்த சமூதாய அமைப்பு உருவாகும் இடமாகப் பள்ளியைப் பார்த்தார்க...

பள்ளிக்கு வெளியே கற்றல் ,பள்ளிக்கு உள்ளே கற்றல்.

வகுப்பறைக்கு வெளியே: தெளிவாகப் பேசுதல், நிமிர்ந்து முகம் பார்த்துப் பேசுதல், சத்தமாக, தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளை வகுப்பறையில் வளர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும். இந்தப் பண்புகளே வெளி  உலகத்தில் கெட்ட எண்ணங்களுடனும், நயவஞ்சகமாகவும் பேசி, தவறான வழியைப் பயன்படுத்த நினைப்பவருக்கும் ஒரு பயத்தைக் கொடுக்கும். அந்நியரின் பரிசுப் பொருள் வேண்டாம்: எந்த உறவினரும், அந்நியரும் உங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் கொடுக்கும் பரிசுப் பொருட்களை வேண்டாம் என்று தெளிவாக மறுத்துவிடுங்கள். மாணவர்கள், தம் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும். பாராட்டு எனும் விருது! பிறரைப் பாராட்டுவது போல உங்களையே பாராட்டிக்கொள்ளுங்கள். உதாரணமாக, இன்று செய்த செயல்களில் பெருமைப்படக்கூடிய செயல் எது? நாளை எந்தச் செயலை சிறப்பாகச் செய்யலாம் போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவரைப் பாராட்டும்போது, அவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படும். செயல்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்க உதவும். நமது பாராட்டு,   அவர்களுடைய செயலுக்குக் கிடைத்த ...

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள்

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள் சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்யமுடியாது. ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்.  கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.     பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.  அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன.   எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும்.  அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும். 1.விரிவுரை முறை கற்பித்தல் 2.குழுமுறைக் கற்பித்தல் 3.வினாவிடை முறைக்கற்பித்தல் 4.கூட்டுமுறைக்கற்பித்த...

வளரிளம் பருவம்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்: 3.1  உடல் வளர்ச்சியின் பருவங்கள் : ஒரு பெண்ணில் ,  முதல் இருபது ஆண்டுகால வாழ்க்கையை நாங்கு பருவங்களாகப் பிரிக்கலாம் . 1.  பிள்ளை பருவம்  ( 6  வயது வரை  ) 2.  பின் பிள்ளை பருவம்  ( 6 - 9  வயது வரை  ) 3.  வளரிளம் முன் பருவம்  ( 9 - 14  வயது வரை  ) 4.  வளரிளம் பின் பருவம்  (15 - 19  வயது வரை  ) 3.11   பிள்ளை பருவம்  ( 6  வயது வரை  ) பெண் குழந்தை பிறந்தது முதல்  6  வயது வரையிலான் காலக் கட்டத்தை பிள்ளைப் பருவம் என்று அழைப்பது வழக்கம் . 3.12  பின் பிள்ளை பருவம்  ( 6 - 9  வயது வரை  ) ஒரு பெண்  6  வயதை கடந்து , 9  வயது வரை இந்த பின் பிள்ளைப் பருவ வயதில் பிள்ளைகளின் பெரியவர்களையும் ,  பெற்றோர்களையும் மகிழ்விக்கவும் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறவும் விரும்புகின்றனர் . இந்த பின் பிள்ளை பருவத்தில் ,  தங்களுக்கென்று நண்பர்கள் குழுவை அமைத்துக்...

சமத்துவமின்மை

உலக அளவில் தொழில் சந்தையில் பாலின சமத்துவமின்மை மார்ச்,08,2016. உலகின் சில பகுதிகளில் பணித்தளங்களில் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும், உலகில் இலட்சக்கணக்கான பெண்கள் தங்களின் பணியிடங்களில் சமத்துவத்திற்காக ஏங்குகின்றனர் என்று, ILO எனும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.  2016ம் ஆண்டின் நிலவரம் குறித்து, 178 நாடுகளில் எடுத்த ஆய்வின் முடிவை, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ILO நிறுவனம், தரமான வேலைகளைக் கண்டுபிடிப்பதற்கும், அதில் நிலைத்து நிற்பதற்கும் எண்ணற்ற சவால்களைப் பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது. உலக அளவில், தொழில் சந்தையில், பெருமளவில் நிலவும் பாலின சமத்துவமின்மையைக் களைவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவதற்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது என்று ILO நிறுவனம் வலியுறுத்துகிறது. 2015ம் ஆண்டில், 58 கோடியே 60 இலட்சம் பெண்கள், தாங்களாகவே ஏதாவது ஒரு வேலை செய்து குடும்பங்களைப் பராமரித்து வந்தனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.   மேலும், இச்செவ்வாயன்று(மார்ச் 8) உலக...

இந்தியாவின் முதன்மை சட்டங்கள்

இந்தியாவின் முதன்மை சட்டங்கள் பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950  ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு  மனிதரின் வாழ்வுரிமையும்  பாதிக்கப்படுதல் கூடாது. பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948  ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது  சுதந்திரத்திற்கும் மற்றும்  பாதுகாப்பிற்கும்  உரிமை உள்ளவர்கள் பிரிவு 6:1, அகில உலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாடு, 1966:  உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த  உணர்விலிருந்து  வருகிறது. இந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். எவருக்கும் இது தன்னிச்சையாக மறுக்கப்படக்கூடாது. பிரிவு 4:1, அமெரிக்க மனித உரிமை உடன்பாடு, 1969:  ஒவ்வொருவரும் தங்கள் உரிமை மதிக்கப்பட உரிமை பெற்றவர்கள். இவ்வுரிமை பொதுவாக  கருக்கொண்ட  நாள் முதலாக பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950:   இந்திய நாட்டில்  வாழும் அனைவருக்கம் எந்த  சமயத்தையும்  தழுவும், தழுவியபடி வாழும், பரப்பவும்...

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியமாவது எப்போது?

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியமாவது எப்போது?                   1944-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சார்ஜென்ட் அறிக்கையில் ஆரம்பக் கல்வி பற்றி பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.                 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச அடிப்படைக் கல்வி போன்றவை இதன் முக்கிய பரிந்துரைகளில் சிலவாகும் .              ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.                சுதந்திரத்துக்குப் பின்னர், அதிகப்படியான பள்ளிகள் தொடங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் பெருகியுள்ள நிலையிலும் ஏன் இந்த நிலை என்று சிந்திக்க வேண்டியுள்ளது. நம் நாடு சுதந்திரமடைந்த பின்னர்,                   1951-ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போத...